வியாழன், 7 மார்ச், 2013

காமிக்ஸும் ஒரு காதுகுத்தும்

நண்பர்களே!
அலுவலகத்தில் அன்று அதிக பணி இல்லாத காரணத்தினால் வீட்டிற்கு கிழம்பிக்கொண்டிருந்த எனக்கு அப்பொழுது வந்த அலைபேசி அழைப்பில் எனது பால்ய நண்பன் பெயரைக்கண்டதும் மகிழ்வுடன் எடுத்துக் கொண்டே நேரத்தையும் பார்த்தேன், ஏழரை எனக்காட்டியது. எனது காதுக்கும் அந்த எண் பொறுந்தும் என்பதனை நான் அப்பொழுது உணரவில்லை 5 நிமிடம் மகிழ்வான உரையாடலின் நடுவே திடீரென இடதுகாதில் ஈயத்தை காச்சி ஊற்றி அதில் துருப்பிடித்த கடப்பாரையை விட்டு அல்வா கிண்டியது போல ஒரு சுலீர் வலி.... சில மாதங்களாகவே என்னிடம் ஜனவாசம் கேட்டுக்கொண்டிருந்த .மூ.தொ வலி (காது-மூக்கு-தொண்டை) நிரந்தரமாக குடிவந்துவிட்டதோ என ஒரே கணம் 10 பொன்னிகாமிக்ஸை ஒன்றாய் கண்டது போல ஒரு அலரலிட்டேன்.
உரையாடலை உடனே முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
 வலி குறைந்தது போல இருந்தது. இதுவரை வந்தது ஒரு ட்ரைலர்தான் என்பது போல இரவில் முழுவடிவில் மெயின் பிச்சராக வலி மூன்றாம் ஆட்டத்தில் (1.00மணி) என்னை அலரலுடன் எழுப்பியது. என்னங்க காமிக்ஸ் பத்தி கனவு ஏதாவது கண்டிங்களா? என்ற துணைவியிடம் விபரத்தை கூறியதும் அடுத்த அரைமணி நேரத்தில் எனது தங்கைவீட்டுக்காரருடன் என்னை குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தார். இரவு நேரமாதலால் நர்ஸ் ஒரு வலி நிவாரண ஊசி மட்டும் செலுத்தி அனுப்பிவிட்டார். வலி நிவாரண மருந்து வீரியம் அதிகமானதால் வீட்டிற்கு வந்து படுத்த 1 மணி நேரத்தில் பயங்கர பட படப்பு வியர்வை . அது தெரியாமல் சரி இனி ஆளை அவ்வளவுதான் என பயத்தில் கண்டபடி உளர ஆரம்பித்து ஒரு வழியாக விடியும் வேளையில் உறங்க ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் காலை வாயை ஒரு நூலிழை கூட திக்க முடியவில்லை மீறி திறந்தால் கா.மூ.தொ வலி. அதனை சரி செய்ய ஒரு கா.மூ.தொ மருத்துவ நிபுணரை அனுகினேன். 10 நிமிட சோதனையில் ஒரு வேதனையை கூறினார் உங்கள் உமிழ் நீர் சுரப்பியில்தான் பிரச்சனை, 1 வாரத்தில் சரியாகலாம் என்றார். கைப்பிடி போல் இருந்த இரண்டு கரண்டிகளை எனது பற்களின் நடுவில் வைத்து நெம்பு கோல் தத்துவத்தை சோதிப்பவர்போல் பிழந்து பார்த்தார் எனது கூச்சலை சற்றும் மனிதர் கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்த சில நாட்களில் வலி சிறிதும் குறைந்தபாடில்லை இரவு மிக சரியாக 3.00 மணிக்கு வலி ஆரம்பித்துவிடும் 2 மணி நேரம் தொடர்ந்து கர்ண கொடூர பாட்டுக்கச்சேரிதான். ஆரம்பத்தில் அலறிய மை பெட்டர் ஹாப் அடுத்த நாட்களில் அட அதுக்குள்ள 3 மணி ஆயிடுச்சா என்று எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.
எனது பையன் அப்பா அந்த அலாரத்தை 6மணிக்கு மாத்தி வைங்கப்பா என தூக்கத்தில் பிதற்றினான்
இரண்டு , மூன்றாம் , நான்காம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் எதற்கும் இந்த மருத்துவரிடமும் ஒரு ஆலோசனை கேட்டு வாருங்கள் என கடிதத்தை நீட்டினார் கா.மு.தொ மருத்துவ நிபுணர் .
மீண்டும் அதே நெம்புகோல் தத்துவ செயல் பாட்டிற்கு பின் சிரித்துக் கொண்டே புதிய மருத்துவர் உங்களுக்கு கா.மு.தொ பிரச்சனை இல்லை பல்லில் தான் பிரச்சனை இதற்கு நான் பார்க்க முடியாது. ஒரு சிறந்த பல் மருத்துவரை பாருங்கள் என கூறி பதிவுக்கட்டணம் (!) , அட்டைக்கட்டணம் (?) , மருத்துவக்கட்டணம் என கறந்துவிட்டு அனுப்பினார்.
டோக்கன் இல்லாமல் செல்லும் தந்திரத்தை தொரிந்து வைத்திருந்ததால் பல் மருத்துவரை உடனடியாக பார்க்க முடிந்தது . பரிசோதித்த பெண் மருத்துவர் சார் உங்களுக்கு பல் அனைத்தும் நல்ல நிலையில் தான் உள்ளது . ஆனால் இடது கீழ் கடைசி கடவாய்ப்பல் மேலே இடிக்கிறது அதனை பிடுங்கினால் தான் நீங்கள் இனி வாயே திறக்க முடியும் என ஒரு குண்டை தூக்கி போட்டார். ஏற்கனவே BPK பதிவில் கதிகலங்கிப்போனது அந்த நேரத்தில் நினைவில் வந்து பீதியை கிளப்பியது. சரி 2 நாட்களில் திரும்பி வருகிறேன் என கூறியபொழுது சார் ஏற்கன்வே தாமதம் இன்னும் தாமதித்தால் பிரச்சனை இன்னும் அதிகமாகும் என மிரட்டிப்பார்த்தார்
தப்பித்து வெளிவந்தவன் அடுத்த பல் டாக்டரை பார்த்தேன் .

அவர் உங்களின் பிரச்சனை பல் இல்லை அதிக மன அழுத்தம்தான் எனவே நீங்க ஒரு நல்ல..... அவர் சொல்லி முடிப்பதற்குள் மனதிற்குள் சரி இனி இதயம் சம்பத்தப்பட்ட மருத்துவர் மட்டும்தான் பாக்கி அவரையும் பார்த்து விட்டால் ஒரு முழு உடல் பரிசோதனை பார்த்த தாகிவிடும் எண்ணிக்கொண்டு வெளிவந்தேன் அப்பொழுது கையில் இருந்த கைபேசி எனது ரிங்க் டோனான " குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"என்ற M.S.சுப்பு லட்சுமியின்  குரலில் ஒலிக்க எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியாமல் நகர்ந்தேன்
அதன் பின் ஹோமியோபதி , அலோபதி என பல பார்த்தும் பலனலிக்காமல் இருந்த நிலையில்
கோடானகோடி இரகசியங்களை உள்ளடக்கிய எனது புதிர்களை மனிதர்கள் நீங்கள் அறிவது கடினம் எனும்வகையில் தானாகவே படிப்படியாக எனது வலி குறைந்து இன்று 70 சதவீதம் சரியாகிவிட்டது.


 
நடுப்பட்ட இந்த 10 நாள் ஓய்வில் விஸ்வரூபம் படம் பார்த்தேன். அன்று இரவு கனவில் தாலிபான் பிரச்சனை ஓய்ந்தால் தான் உங்கள் காதுவலி சரியாகும் என்ற ஒரு கெட்ட அசிரீரி ....
அடுத்த நாள் நண்பர் சிபியிடம் படிக்க வாங்கிய கொரில்லா சாம்ராஜ்யத்தை படித்த பொழுது அன்று இரவு கனவில் இரும்புக்கை மாயாவி தனது துப்பாக்கி விரலை எனது  கடவாயில் விட்டு ஆட்டுவதுபோல ஒரு கனவு .. எல்லாம் அந்த அதிக்ப்படியான வலி நிவாரணி மருந்துக்களின் ஆதிக்கம் என அறிந்து கொண்ட பின்னர் பொழுது போக்கையும் கைவிட்டேன்.
கொரில்லா சாம்ராஜ்யம்

கொரிலாக்களின் சக்தி அனைத்தையும் மனிதன் அடையும் விதத்தில் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி.
விஞ்ஞானி யிடம் அதே கொரிலாக்கள் அதே பாணியை பின்பற்றி மனித சக்தியை அவைகள் பெற்றுக்கொள்கின்றன . பின்னர் தனக்கென ஒரு சாம்ராஜ்த்தை நிறுவி மனிதனை அடிமைகொள்கின்றது இதனை தனது இரும்புக்கரம் கொண்டு மாயாவி எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் கதை
அதி அற்புதமான வண்ண ஓவியத்தில் வெளிவந்துள்ள முத்துவின் 25 வது வெளியீடு . இன்றும் படிப்பதற்கு விறு விறுப்பாகவே உள்ளது.சமீபத்தில் வெளிந்த " Rise of the Planet of the Apes" ஆங்கில திரைப்படம்   இந்த கதையின் தலுவலாக தெரிகிறது.


 
மதியில்லா மந்திரி
மொழிபெயர்ப்பு போட்டியில் பங்குபெற்ற  மதியில்லாமந்திரியின் கதை 1992 இல் நமது வாண்டு மாமா மொழிபெயர்ப்பில் வானதிபதிப்பகம் அதே சித்திரங்களுடன் சிறுகதையாக எழுத்துவடிவில் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் இன்னும் இரு மதியில்லா மந்திரி கதைகளும் உள்ளன.

நன்றி நண்பர்களே ! மீண்டும் சந்திப்போம்

18 கருத்துகள்:

  1. ஆசிரியரின் பதிவிற்காக காத்திருக்கும் பொழுது உங்களது பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள்.உங்கள் பதிவிர்காவது நான் முதல் பின்னுட்டம் இடுகிறேன்.

    பதிவை படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம் இவ்வளவு வலியிலும் நகைச்சுவை பதிவா?
      முடிவில் இன்னும் உங்கள் வலிக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனபது இன்னும்
      சஸ்பென்சாக இருக்கிறது.
      நீங்கள் சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள்.
      கலரில் மாயாவி அழகாக இருக்கிறார்.

      நீக்கு
    2. //வலிக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனபது இன்னும்
      சஸ்பென்சாக இருக்கிறது.//
      ஒரு நல்ல விடயம் தெரிந்த மருத்துவரை தேடுவது அதைவிட சஸ்பென்சாகவே உள்ளது

      நீக்கு
  2. valiyellam vilagi vaalga valamudan thozhare!nalla pathivu! korillaakkalin ulagathil sanjariththathu ponra anubavam koduthathu! namma selam tex vijayaragavan thangalin anbai sumanthu ennidam serthaar! mikka nanringa Ji!

    பதிலளிநீக்கு
  3. //நெம்பு கோல் தத்துவத்தை சோதிப்பவர்போல்//
    //அடுத்த நாட்களில் அட அதுக்குள்ள 3 மணி ஆயிடுச்சா என்று எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.//

    இப்படி பல இடங்களில் நகைச்சுவை தெறிக்கிறது உங்கள் பதிவில்! :) வாழ்த்துக்கள்! :)

    //தானாகவே படிப்படியாக எனது வலி குறைந்து இன்று 70 சதவீதம் சரியாகிவிட்டது.//
    இப்படி நம்பித்தான் நானும் நாசமாகப் போனேன்! :) சில மாதங்கள் வலி இல்லாதது போல்தான் இருக்கும் - ரிஸ்க் எடுக்க வேண்டாம்! தாமதித்தால் கடைசிப் பல், தன்னருகில் உள்ள வேறு பற்களையும் துணைக்கு அழைத்து விடும்! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டாலின் சார், அனுபவஸ்தர்கள் சொன்னால் கேட்டுக்கணும் :)

      நீக்கு
    2. Karthik Somalinga://தன்னருகில் உள்ள வேறு பற்களையும் துணைக்கு அழைத்து விடும்! ;)//
      எனக்குத்தான் பல்லில் சுத்தமாக வலியே இல்லையே! ஏதாவது புது டெக்னாலஜியாக இருக்குமோ :)

      நீக்கு
    3. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்:
      உங்களுக்கும் முன்னனுபவம் உள்ளதா? :)

      நீக்கு
  4. சீக்கிரமே நலமடைய பிராத்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Erode VIJAY: நன்றி நண்பரே! சிவராத்திரி விழிப்பா? :)

      நீக்கு
  5. ஹா ஹா ஹா

    மன்னிக்கவும் நண்பரே சிரிக்காமல் இருக்க முடியவில்லை

    தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும் :))
    .

    பதிலளிநீக்கு
  6. Cibiசிபி: //சிரிக்காமல் இருக்க முடியவில்லை //
    புத்தகம் இன்னும் என் கையில் தான் இருக்கிறது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  7. //ஆரம்பத்தில் அலறிய மை பெட்டர் ஹாப் அடுத்த நாட்களில் அட அதுக்குள்ள 3 மணி ஆயிடுச்சா என்று எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.
    எனது பையன் அப்பா அந்த அலாரத்தை 6மணிக்கு மாத்தி வைங்கப்பா என தூக்கத்தில் பிதற்றினான்//

    ஹா ஹா சூப்பர் ஸ்டாலின். இது போன்ற (வலி இல்லாத) நகைச்சுவை பதிவு எழுதுங்கள்.

    சீக்கிரம் நல்ல வைத்தியரை பாருங்கள். நான் ரெண்டு வாரம் முன்புதான் கார்த்திக் சொன்ன விஸ்டம் டூத் பிடுங்கினேன். வலி சுத்தமாக இல்லை. பக்கத்தில் இருக்கும் பல்லின் வேரில் நாக்கால் தொட்டால் மட்டுமே லேசாக வலி இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

    மாயாவி கலரில் அருமை. கலரில் மாயாவி வந்திருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
  8. Raj Muthu Kumar S: வாருங்கள் நண்பரே!
    கலரில் நான் அறிந்தவரை 3 மாயவி இதழ்கள் வந்துள்ளன
    யார் அந்த மாயாவி, கொரில்லா சாம்ராஜ்யம், கொள்ளைக்கார பிசாசு
    (நேரமிருந்தால் இந்த கலர் மாயாவியையும் படியுங்கள்
    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/06/3.html)

    பதிலளிநீக்கு
  9. நமது உள்ளுர் ஓவியர்களின் திறமையில் வெளிவந்த கலர் இதழ்கள், ஒரிஜினலில் உருவாகியிருந்தால் கூட இவ்வளவு நேர்த்தியாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை. பாராட்டதக்க விஷயம். சமீபத்தில் இப்படி கலர் அடிக்கபட்ட வருடங்களை பற்றி எடி ஆத்மார்த்தமாக பதிவிட்டிருந்ததாக நியாபகம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முந்தைய பதிவை படித்த போதுதான் உணர்ந்தேன். இவை மார்வல் மூலம் வெளியான கலர் கதைகள் அல்லவா... அப்போது எடி லோக்கலாக கலர் அடிக்கபட்டு வெளியான கதை என்று குறிபிட்ட மாயாவி கதை எது ?

      நான் பால்ய காலத்தில் படித்த ஒரே மாயாவி கலர் கதை, கொள்ளைக்கார பிசாசு தான்... இன்றும் நினைவில் மட்டும் தங்கிய இதழ் :(

      நீக்கு
  10. //எடி லோக்கலாக கலர் அடிக்கபட்டு வெளியான கதை என்று குறிபிட்ட மாயாவி கதை எது ?//
    நீங்கள் மட்டும்மல்ல நானும் பால்ய வயதில் விரும்பிப்படித்த "கொள்ளைக்கார மாயாவிதான்" அந்த இதழ்

    பதிலளிநீக்கு