செவ்வாய், 31 ஜூலை, 2012

ஈரோடு புத்தகத் திருவிழா

ஈரோடு மாநகர மக்கள் தங்களை  ஒரு அறிவு சார்ந்த  விழாவிற்கு தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டு வருகின்றனர். வரும் 3/8/2012 முதல் 14/8/2012 நடைபெறும்  இந்த திருவிழா மிகச்சிற்ந்த புத்தக கண்காட்சி என்றமட்டிலும் இல்லாமல் தங்கள்வீட்டு விசேஷமாகவே  நினைக்கின்றனர் 

உலகதரம்வாய்ந்த அரங்கங்கள், அறிவுசார் பெறியவர்களின் மாலை நேர சொற்பொழிவுகள் என பல நிகழ்வுக்காக தவம் கிடக்கிறோம்.

 மக்கள் சிந்தனை பேரவை சார்பாக நடத்தப்படும் 8 வது புத்தக கண்காட்சிக்கு அனத்து நண்பர்களையும் வரவேற்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

வாருங்கள் வந்து அறிவு பசியையும் , செவிக்கு உணவையும் பெற்றுச்செல்லுங்கள்


 மேலும் நிகழ்வுகள் குறித்த விஷயங்களுக்கு இந்த வலைதளத்தை புரட்டவும்.

 சிறப்பு அம்சங்கள் : 200 ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்கும் சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது , பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பரிசு , மாணவர்களுக்கு நூல் வாங்க பணம் சேர்பதற்கு மலிவு விலை உண்டியல் இப்படி பல.....


திருவிழா ஆரம்பித்தவுடன் எனது அனுபவங்களை பகிர்கிறேன்.

 
காமிக்ஸ்புத்தகம் :இதனை சொல்லவில்லை என்றால் சிலர் என்னை காமிக்ஸ் கிடைக்காத நாட்டிற்கு பார்சல் செய்து விடுவார்கள். முத்து ,லயன்,CC காமிக்ஸ்கள் கிடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு தினங்களில் அது குறித்த அறிவிப்பு வரும்

 பிற்சேற்கை (2/8/2012)
 புத்தக திருவிழாவில் லயன் -முத்து கமிக்ஸ்கள் இதழ்கள் அரங்கம் எண் 125 -பல்லவி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் அன்ட் மாஸ் கம்யூனிகேஸன்ஸ் பி லிட்   மற்றும் அரங்கம் எண் 27,28 - ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் - ஆகிய இடங்களில் கிடைக்கும்