வியாழன், 15 ஆகஸ்ட், 2013

காமிக்ஸிற்காக வீட்டைவிட்டு ஓடினேன் ( புத்தக திருவிழா 10&11வது நாள்)

நண்பர்களே வணக்கம்.

12 -8-2013 இன்று கொஞ்சம் சுமாரான கூட்டமாக இருந்தாலும் . இரு மிக முக்கியமான நபர்களை சந்தித்தேன். ஒருவர் இந்திய மாஜிக் சங்கத்தின் தலைவர்  எனது நண்பருமான திரு கார்டீசியன் சந்திர சேகர் ( சீட்டுக்கட்டு வித்தைகளில் நிபுணர்) . ம்ற்றொருவர் வீட்டில் தெரியாமல்  விலைக்கு போட்டுவிட்ட காமிக்ஸை அடைந்தே தீருவதற்காக வீட்டைவிட்டு தெரியாமல் சிவகாசிக்கே பஸ் ஏறி ஓடிப்போய் புத்தகம் வாங்கியவர் இவர்களின் இருவருடய பேட்டிகளை அலைபேசியில் எடுத்தவற்றை இத்துடன் பகிற்துள்ளேன்
13-8-2013 இன்று எனது நண்பரும் மிகச்சிறந்த காமிக்ஸ் ஓவியருமான வினோத் அவர்களை சந்திக்க நேரிட்டது. பல வருடங்களுக்கு முன் அவர் வரைந்த காமிக்ஸின் சில பக்கங்கள் இன்றும் என்னிட்ம் பாதுகாப்பாக உள்ளது
                                                 11-8-2013 தின காட்ச்சிகள்


                                   காமிக்ஸிற்காக வீட்டை விட்டு ஓடினேன்,,,,
                                                  நான் மாண்ட்ரேக் ரசிகன்












                                                             மக்கள் அலை
 (விரைவில் நண்பர் விஜய் உதவியுடன் நண்பர்கள் பெயர்கள் எழுதப்படும் )
மைண்ட் வாய்ஸ்-part-2



மைண்ட் வாய்ஸ் தொடரும் நண்பர்க்ளே......

 அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 11-8-2013)

 நண்பர்களே வணக்கம்

மனம் முழுக்க சந்தோஷ உணர்வுகள் ஏகத்தும் நிரம்பிக் கிடக்கும்போது அங்கே கூக்குரலிட்டு குதூகலிப்பதைக் காட்டிலும் வார்த்தைகளால் எழுதமுடிவது ஒரு துளியாய் இருந்திடும்தானே?!

எனினும், நண்பர்களுக்காக இதோ சிறு துளிகள்...

* புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும் நேரமான காலை 11 மணிக்கே எடிட்டர் நமது ஸ்டாலில் ஆஜராகிவிட, நமது வெளியூர் நண்பர்களில் சிலர் காலை 8:30 மணியிலிருந்தே 'உள்ளேன் ஐயா' போட்டிருந்தனர்.

* எடிட்டர் ஸ்டாலுக்கு வந்ததும் அவருக்காகக் காத்திருந்த நண்பர்கள்  ஆர்வமாய்ச் சூழ்ந்துகொள்ள, மொத்த அரங்கத்திலும் எங்குமே காணமுடியாத உற்சாகமான ஒரு கூட்டம் நம் ஸ்டாலில் மட்டுமே காணக்கிடைத்தது. கேமரா ஃப்ளாஷ்களும், ஒருவரையே மையமாகக் கொண்டு குழுமியிருந்த கூட்டமும் அங்கே கடந்து சென்ற பொதுமக்களை 'யாராவது சினிமா நடிகர் வந்திருப்பாரோ?' என்று நினைக்கத் தூண்டியிருப்பது சத்தியம். நம் எடிட்டரை 'ஒருவேளை இவர் நடிகர் ப்ரேம்-ஆக இருக்குமோ?' என்று கூட நினைத்திருக்கலாம். ;)

* 12 மணி சுமாருக்கு ஆஜரான பிரபல பதிவர் கார்த்திக் சோமலிங்கா-வைப் பார்த்ததுமே அதுவரை 'கார்த்திக்' என்ற பெயரைக் கேட்டாலே எனக்குள் தோன்றி வந்த கொலைவெறி 'சூரியனைக் கண்ட பனி'போல் விலகியதோடு, 'குபீர்' என்று ஒரு பாச உணர்வு ஓடோடி வந்து ஒட்டிக்கொண்டதையும் எவ்விதம் நான் வார்த்தைகளில் விளக்குவேன்!! நாள் முழுக்க பலரும் என்னை 'கிறுக்கு(ம்) பூனையார்' என்றே அழைத்தபோது, அந்தப் பெயரை எனக்கு வைத்த நபர் ஒன்றுமறியாத குழந்தையைப் போல் ஒரு புன்னகையுடன் ஓரமாய் நின்று ரசித்துக் கொண்டிருந்ததே!!

* இயல்பில் தான் யாருடனும் அதிகம் பேசாதவரென்று நம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்ட நண்பர் சிவ.சரவணகுமார், எடிட்டரிடமும் மற்ற நண்பர்களிடமும் தனது உற்சாகம் தெறிக்கும் பேச்சுக்களால் அந்த இடத்தேயே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்!

* கரூரை அடுத்துள்ள ஒரு ஊரிலிருந்து (ஈரோட்டிலிருந்து சுமார் 110 கி.மீ) மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பைக்கிலேயே வந்திருந்த நண்பர் பழனிவேல், அதே காரணத்திற்காக எடிட்டரிம் வாங்கிக் கட்டிக் கொண்டார்!

* திருச்செந்தூரிலிருந்து தனது மனைவியுடன் வந்திருந்த ஷல்லூம் பெர்ணான்டஸின் ஆர்வமும் நண்பர்களை வியப்பிலாழ்தியது!

* வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களை உபசரிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம் எடிட்டரை முதன்முதலாகக் கண்டிடும் ஆர்வத்தில் தன் சகோதரியோடு (தீவிர காமிக்ஸ் ரசிகை) வந்திருந்த 'சேலம் கார்த்திக்' , எடிட்டருக்கு அன்புப் பரிசுகொடுத்து தன் நீண்டநாள் கனவு பலித்துவிட்ட திருப்தியில், போக மனமின்றி விடைபெற்றார்.

* சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நம் எடிட்டரை தனியொரு மனிதனாய் தன் கேள்விக் கணைகளால் வாட்டியெடுத்த பெங்களூரு மகேஷ், 'சிங்கத்தின் சிறுவயதில்' ஒரு தொகுப்பாக வந்தே தீருமென்று வாதாடினார். பலன் 'இப்போதைக்கு' பூஜ்யம்தான் எனினும் 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பதை இந்தப் போராட்டக்குழு அறியாததல்லவே?!! ;)

* நண்பர் சிபியும், நண்பர் கார்த்திக் சோமலிங்காகாவும் ஈரோடு நண்பர்களுக்கு பரிசுகளை வாங்கி வந்திருந்து இன்ப அதிர்ச்சியளித்தனர். நன்றி நண்பர்களே!! உங்களின் இந்த நிபந்தனையில்லா அன்புக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாகிறோம்!

* கேள்விகளாலும், மறுபதிப்பு நச்சரிப்புகளாலும் துளைத்தெடுத்த நமது நண்பர்களையும், தீர்மானமாய் மறுத்துவந்த எடிட்டரையும் சற்றே தள்ளியிருந்து நோக்கியபோது 'ஓ! இதுதான் விடாக்கண்டன்-கொடாக்கண்டன் கதையா?!' என்று நினைக்கத் தோன்றியது!  ;)

* கடந்த வாரத்தில் நமது ஸ்டாலுக்கு வருகைபுரிந்திருந்த பழைய வாசகர்கள் அனைவருக்கும் எடிட்டரின் வருகைபற்றி முன்பே அறிவித்திருந்தோம். அவர்களில் பலரும் தேற்று வந்திருந்து எடிட்டரைச் சந்தித்து உறையாடிச் சென்றனர்.

* சில பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்து, தங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதாக பெருமையுடன் சொல்லிச் சென்றனர்.

* 'டைகர் கதைகளைப் படித்தே தனக்கிருந்த பய உணர்வுகளை விட்டொழித்ததாக' ஸ்டாலினின் வலைப்பூவில் பேட்டியளித்திருந்த நண்பரொருவர் நேற்று எடிட்டரிடம் அவர்தான் எடிட்டர் என்று தெரியாமலேயே சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் குறுக்கிட்டு 'இவர்தான் எடிட்டர் விஜயன்' என்று அறிமுகப் படுத்தி ஆர்ப்பாட்டமாய் சிரித்ததெல்லாம் கலாட்டா நேரங்கள்! ;)
 * ரத்தப் படலம் பற்றிய விசாரிப்புகள் நேற்றும் தொடர்ந்தன. 'அடுத்த சில வருடங்களுக்காவது நிச்சயமாய் கிடையாது' என்பதே எடிட்டரின் பதிலாக இருந்தது.

* அடுத்தமாதம் அறிமுகமாகப் போகும் அந்தப் புது காமெடி கார்ட்டூன் யாரென்ற கேள்விகளுக்கு 'அடுத்த மாதம்வரை பொறுக்கக் கூடாதா?' என்ற எடிட்டர் ஒருவாறாக 'சரி, அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்' என்றார்!

* 'இதுவரை நாம் படித்திடாத எத்தனையோ கதைகள் நமக்காக் காத்திருக்கும்போது, மறுபதிப்புகளில் கவனம் செலுத்திடுவது எவ்வகையில் சுவாரஸ்யம் தந்திடும்?' என்று கேள்வியெழுப்புகிறார் நம் எடிட்டர் ( அதானே?!)

* ஐந்து 'லாங்-சைஸ்' பக்கங்களில் பழைய ஹீரோக்களைப் பற்றிய தங்கள் மனக்குறையை கொட்டி ஒரு கடுதாசி எழுதியிருந்தனர் மேட்டூரைச் சேர்ந்த வாசகர் குடும்பம் ஒன்று!

* 'வருகின்ற ஜனவரி-சென்னை புத்தகத் திருவிழாவிற்கென ஏதேனும் சிறப்பிதழ் தயாராகி வருகிறதா சார்?' என்ற கேள்விக்கு கிடைத்ததோ ஒரு (மர்மப்) புன்னகையையும், ஒரு (அர்த்தமுள்ள) பார்வையையும் மட்டுமே!

கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட நண்பர்களில் சிலர்...
பரணிதரன், தாரமங்கலம்,
கர்ணன், சேலம்
டெக்ஸ் விஜயராகவன், சேலம்
கார்த்திக், சேலம்
பாரதி நந்தீஸ்வரன். குமாரபாளையம்
செல்வராஜ், கோவை
கார்த்திக் சோமலிங்கா, பெங்களூரு
கார்த்திகை பாண்டியன், மதுரை
கார்த்திக், ஈரோடு,
சிவகுமார், ஈரோடு,
சங்கர், ஈரோடு
பழனிவேல் ஆறுமுகம் -மனைவி, குழந்தையுடன், கரூர்
ஷல்லூம் ஃபெர்ணான்டஸ், மனைவியுடன், திருச்செந்தூர்
சி. பிரபாகரன் (சிபி), திருப்பூர்
வால் பையன், ஈரோடு
சிவ. சரவணகுமார், திருப்பூர்
பூபதி, திருச்செங்கோடு
கோகுல், நாமக்கல்
கணேஷ், பள்ளிபாளையம்
சிபிசக்கரவர்த்தி, ஈரோடு
சதீஸ், ஈரோடு
ராஜா, ஈரோடு
அஸ்லம் பாட்ஷா, மதுரை
சாரதி, கொடுவாய்
ஜெய்லாணி, தாராபுரம்
கிருபாகரன், சேலம்
டாக்டர். பாலு, ஈரோடு
சக்திவேல், ஈரோடு
சுவாமிநாதன், கரூர்
கே.டி.எஸ். ஆனந், சென்னிமலை
மொஹமத் அன்சாரி, சென்னிமலை
செல்வம், கோவை
கெளதமன், பெருந்துறை
சந்திரகலா, சேலம்
செந்தில் மாதேஸ்
மொய்தீன், ஈரோடு
சக்திவேல், சித்தோடு
இவர்களுடன்...
ஸ்டாலின்,
சோமசுந்தரம்(புனித சாத்தான்)
ஆடிட்டர் ராஜா,
விஜய்
(பெயர்விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும்! பல்வேறு காரணங்களால் அவசரகதியில் வந்து சென்ற நிறைய நண்பர்களின் பெயர்களைக் குறித்துவைக்க இயலவில்லை)  :(

விடுபட்ட நண்பர்களின் பெயர்கள் வேறு யாருக்கேனும் தெரிந்திடும்பட்சத்தில் இங்கே பின்னூட்டமாக இட வேண்டுகிறேன்.

அன்புடன்
விஜய்

 ஈரோடு புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும்பொழுதே நண்பர் விஜயும் நானும் செய்து கொண்ட  ஒப்பந்தத்தின் படி அலுவல் பணி காரணமாக ( காலையில் புத்தகத்திருவிழா இரவில் எனது வீட்டில் எனது அலுலக ப்பணி ) இந்த வலைப்பூவை விழா முடியும் வரை இருவரும் பயன்படுத்த முடிவு செய்தோம் ஆகவே எனது கருத்துபதிவிகளையும் சேர்த்து விஜயின் பதிவுகளில் சேர்த்துவிட்டதால் இங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இடமளிக்கிறேன்.  விரைவில் சில ஜாலியான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். சில போட்டாக்களில் மைண்ட் வாய்ஸயும் இணைத்துள்ளேன் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காகத்தான் நண்பர்களே :)

அன்புடன்
ம.ஸ்டாலின் 






















 சில காமிக்ஸ் கலாட்டாக்கள்
                             







.காமிக்ஸ் கலாட்டாக்கள் தொடரும்...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சுட்டியை ரசிக்கும் சுட்டி ஈரோடு புத்தகத்திருவிழா (7 + 8 வது நாள் ) 9&10-8-2013

காமிக்ஸ் திருவிழா (7வது நாள்- வெள்ளிக்கிழமை)

* ரம்ஜான் விடுமுறையென்பதால் நிறைய எண்ணிக்கையில் குடும்பம் குடும்பமாக மக்கள் அரங்கம் முழுவதும் காணக்கிடைத்தனர். கூடவே நிதானமாக புத்தகம் தேடும் இளைஞர்களும், யெளவன யுவதிகளும்!

* நம் ஸ்டாலிலும் இன்று நிறையவே கூட்டம். பெரும்பாலான நேரங்களில் நம் ஸ்டால் நிரம்பி வழிந்தது. நீண்ட நெடுங்காலமாக காமிக்ஸ் படித்துவரும் பல புதிய நண்பர்களையும், அங்கிள்களையும் பிரகாசமான முகங்களோடு நிறைய எண்ணிக்கையில் கண்டிட முடிந்தது. அதே உற்சாகம்! அதே ஆர்வம்! ஈரோடு பகுதிகளில் இத்தனை காமிக்ஸ் ரசிகர்களா!!!

* இன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக, பல பதின்பருவ சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்து தங்களுக்குப் பிடித்த காமிக்ஸ்களை அள்ளிச் சென்ற சந்தோஷ சம்பவங்களைக் கூறலாம். எதிர்கால சந்தாதாரர்கள் நிறைய எண்ணிக்கையில் உருவாகிவருவதை மனது நிறைவாய் உணர்ந்தது.

* ஒரு பதினாலு வயதுச் சிறுவன் தினமும் நமது ஸ்டாலிற்கு வந்து காமிக்ஸ் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடம் விசாரித்ததில் சமீப காலத்தில்தான் தனக்கு காமிக்ஸ் அறிமுகமானதாகவும், தனக்கு லார்கோ, டெக்ஸ் வில்லர் கதைகள் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தான்.

* 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' தனக்குப் பிடித்திருப்பதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருத்தி சொன்னது நம் நண்பர்களை இன்பஅதிர்ச்சியடைய வைத்தது. SHSSஐ தான் இருமுறை படித்துவிட்டதாகவும், சுட்டிலக்கியை தான் விரும்பவுல்லை என்றும் கூறி மேலும் அதிர்ச்சியடைய வைத்தாள் (தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்த்திடும், நண்பர் கார்த்திக்கின் பக்கத்துவீட்டுப் பெண் ஞாபகம் வந்தது).

* கணவன்-மனைவி இருவருமே தீவிரக் காமிக்ஸ் பிரியர்களாக இருந்திடுவது அத்தி பூத்தாற்போல் மிகவும் அரிததென்பது நாம் அறிந்ததே! அப்படிப்பட்ட ஒரு தம்பதிகளையும் சந்தித்திட முடிந்தது. தான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகையென்றும், கிட்டத்தட்ட எல்லா டெக்ஸ் கதைகளையும் தான் படித்துவிட்டதாகவும் அப்பெண்மணி பெருமை பொங்க சொன்னபோது, கார்ஸனுடன் துப்பாக்கி பிடித்து சண்டைக்கு ரெடியாகிக்கொண்டிருந்த (நண்பர் பொடியனின் கைவண்ணம்) என் 'தல' யை பெருமையுடன் பார்த்துக் கொண்டேன்.

விற்பனையிலும், மக்கள் காட்டிய ஆர்வத்திலும் நிறைவாய் உணரவைத்த மற்றுமொரு அழகான நாள்! :)

 அன்புடன்

விஜய்

காமிக்ஸ் திருவிழா (8வது நாள்) 10-8-2013
 ஒரு குட்டி பயலின் காமிக்ஸ் ரசனையை சற்று பாருங்களேன்
                                                    சுட்டியை ரசிக்கும் சுட்டி
                                                            டாக்டர் பாலு

                                          சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்

                 சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தான் என்னைகவர்ந்த இத்ழ்






                                                         காமிக்ஸ் குடும்பம்
*நண்பர் ராஜ்குமார் தொடர்ந்து நான்கு நாட்களாக காலை முதல் இரவுவரைஸ்டாலில் இருந்து வரும் நபர்களுக்கு காமிக்ஸ் குறித்து எடுத்துரைக்கிறார்
* ஞாயிற்றுக்கிழமை ஆசிரியரை சந்திக்க புதிய வாசகர்கள் அனேகம் நபர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்
* இன்று இரவு கரூரை சார்ந்த சாமி நாதன் என்ற நண்பர் சந்தா செலுத்திய நபர்களை மட்டும்தான் ஆசிரியர் பார்ப்பாரா? என ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்ட பொழுவது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ( இவரை உச்ப்பிவிட்ட அந்த குறும்புக்கார நண்பர் யாரோ? ). புதிய வாசகர்களை பார்க்கத்தான் அவர் மிகவும் சந்தோஷ்ப்படுவார் என்றவுடன் நாளை காலை முதல் ஆளாக ஆஜராகிவிடுவதாக கூறினார்
* மகாஜனா பள்ளியை சேர்ந்த ஒவிய ஆசிரியர் பழைய கதைகள் குறித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 70+ தாண்டிய தனது தந்தையுடன் வந்திருந்த அவர் தனக்கு காமிக்ஸை அறிமுகபடுத்தியது தனது தந்தைதான் என்றும் அதற்காக என்றும் நன்றிகடன் பட்டுள்ளேன் என்றார். அவர் தந்தையும் காமிக்ஸ் அரங்கை பார்ப்பதற்காகவே  வந்ததாக கூறியது நெகிழ வைத்தது . அவர் நாளை ஆசிரியரை சந்தித்து பழைய இதழ்களுக்காக சண்டைப்போடப்போவதாக கூறியது வேறுகதை
* இதுவரை பள்ளிகளின் ஓவிய ஆசிரியர்கள் மட்டும் எனக்கு தெரிந்து  குறைந்த பட்சம் 15 நபர்களாவது இருப்பார்கள்

நாளைய திருவிழாவிற்கான கணவுகளுட்ன் உறங்க செல்கிறேன்

அன்புடன்
ம.ஸ்டாலின்

படங்கள் : விஜய்

நாளை சந்திப்போம் நண்பர்களே