ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

குதுகல ஆரம்பம்....

நண்பர்களே
வணக்கம்.
31-7-2015 முதல்   துவங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா!

மலேசியாவிலிருந்து வருகைபுரியும், சார்க் கூட்டமைப்பின் சிறப்புத் தூதர் திரு. டத்தோ சாமிவேலு அவர்கள் மாலை 6 மணிக்கு புத்தகக் திருவிழாவைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். 

இரண்டுமுறை EBFல் சிறப்புரையாற்றி தன் எளிமையாலும், அன்பாலும் ஈரோடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாமனிதர் APJ.அப்துல்கலாம் அவர்களின் மறைவினால் ஈரோடு நகரமே தங்கள் உறவினரை இழந்ததைப் போல் சோகத்தில்  மூழ்கிக்கிடக்கிறது. எனவே இம்முறை இந்தப் புத்தகத் திருவிழா அவருக்கு மெளன அஞ்சலி செலுத்திடும் விதமாகவே இயங்கிடும் என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

 

இப்படியொரு சூழலில், சென்ற வருடத்தைப்போல( LMS வெயீடு) கொண்டாட்டமானதொரு நிகழ்வு இம்முறை இல்லாமல்போனதும்கூட ஒருவகையில் நன்மைக்கே என்று நினைக்கத் தோன்றுகிறது! ஏனெனில், உற்சாகக் கூக்குரல்களும், கரவொலிகளும்கூட இப்போதைய இறுக்கமான சூழ்நிலைக்கு சற்றே அந்நியமாகிவிடும் வாய்ப்பிருப்பதே காரணம்!

அதற்காக, சோகத்தை மட்டும் மனதில் தாங்கி மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லைதானே?....  காமிக்ஸ்  புத்தகங்கள் - காமிக்ஸ் சார்ந்த இடம்  - காமிக்ஸ் நண்பர்கள் -  காமிக்ஸ் தொடர்பான உரையாடல்கள் - இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டுமே இருந்தால் கூட அது  இழந்த உற்சாகத்தை மீட்டெடுக்க வல்லது எனும்போது, இவை அனைத்தும் ஒன்றுகூடி சங்கமிக்கப்போகும் ஒரு இடத்தில் நீங்களும் ஒருவராக ஏன் பங்குகொள்ளக்கூடாது? 

இயன்றவர்கள் வாருங்கள் நண்பர்களே! இன்முகத்தோடு காத்திருப்போம்...! 

*  மாலையில் பெய்த மிதமான மழையினாலும், சென்ற வருட துவக்க விழாவில் கலந்துகொண்டு ஈரோட்டையே அதிர வைத்த இசைஞானி இளையராஜாவைப் போல ஒரு கவர்ந்திழுக்கும் personality  இம்முறை இல்லாததினாலும் அரங்கங்கள் சற்று (அதிகமாகவே) வெறிச்சோடிக் கிடந்தது நிஜ௬ம்! பொதுவாகவே EBF அதன் துவக்க நாளன்று மிதமான கூட்டத்தை அரங்கத்தினுள்ளும்,  எக்கச்சக்க கூட்டத்தை கருத்தரங்கம் நடைபெறும் திறந்தவெளியிலும் கொண்டிருக்கும்.  இம்முறை வெளியே இருந்ததே பாதியளவு கூட்டம்தான் என்றால், உள்ளேயோ ஒருசிலர் மட்டுமே! நம் ஸ்டாலும் விதிவிலக்கல்ல!

* மழையால் சற்று தாமதமாகி சுமார் 7 மணிக்கு நான் சென்றபோது, நமது ஸ்டாலில் 'பிரின்டிங்' குமாரும், 'மார்கெட்டிங்' கணேசன் அவர்களும் சிரித்த முகத்தோடு வரவேற்றனர். சென்றமுறை தன் ஏனோதானோ நடவடிக்கைகளால் என்னை ஏகத்துக்கும் டென்ஷனாக்கிய 'சின்னப் பையன்' செல்வம் கண்ணில் படாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது! 

* பள்ளி ஆசிரியர் ஒருவர் 'The lion-250'யை ஏற்கனவே வாங்கி வைத்திருப்பதாகவும், மூன்று கதைகளிலுமே ஓவியங்கள் சரியில்லை என்பதால்(!) கதையைப் படிக்காமல் வைத்திருப்பதாகவும்,நல்ல ஓவியங்கள் இருக்கும்படியான டெக்ஸ் கதைகளையே இனித் தேர்வு செய்யச்சொல்லி நீங்கள் எடிட்டரிடம் வற்புறுத்தவேண்டும்(!) என்றும் என்னிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்! இப்படியொரு புகாரை சற்றும் எதிர்பார்க்காத நான், பிறகு ஒருவழியாகச் சுதாரித்துக்கொண்டு "கதை சூப்பரா இருக்குங்க சார். நீங்க கதையைப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா அப்புறம் இந்தக் குறை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை"என்றேன். 
"அட, ஓவியங்களே சரியில்லைன்றேன்... அப்புறம் கதையை எப்படி படிக்கிறதாம்? தீபாவளிக்கு வரப்போற ஒரு கதைக்கு மட்டும் 'அசாத்திய சித்திரங்களுடன்'னு விளம்பரம் போட்டிருக்காரில்ல? இதுக்கு மட்டும் ஏன் சாதாரணச் சித்திரங்கள்னு கேட்கிறேன்? பதில் சொல்லுங்க" 
"ம்.... எடிட்டர் அடுத்த வாரம் இங்கே வரார். நீங்களே நேர்ல வந்து கேட்டுடுங்களேன்?"
நான் கேட்டுக்கொண்டதற்கும், விடைபெற்றுச் செல்வதற்கும் பொதுவாக ஒரு "வரேன்"ஐ  சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்! 

புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதென்பது அப்படியொன்றும் சுளுவான வேலையில்லை நண்பர்களே! :D

* பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டு ஸ்லோமோஷனில் திரும்பினேன். 'அட! நம்ம ஸ்டாலின்!' . சமீபத்திய உடல்நலக்குறைவிலிருந்து நன்றாகவே மீண்டிருப்பதை அவர் தோற்றமே உறுதிப்படுத்தியது! லக்கிலூக்கின் தீவிர ரசிகனான தன் மகனுடன் வந்திருந்திருந்தார்.

* சென்னை சில்க்ஸின் M.D திரு. விநாயகம் அவர்கள் நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்திருந்தது இன்றைய சிறப்பு நிகழ்வுகளில் (ஒன்றே) ஒன்றாகும்! தொழில்ரீதியாக அவரை நன்கு  தெரிந்துவைத்திருந்த நண்பர் ஸ்டாலின், அவருக்குத் தடபுடல் வரவேற்புக் கொடுத்ததோடு என்னை அறிமுகமும் செய்துவைத்தார். லக்கிலூக் உள்ளிட்ட சில புத்தகங்களைத் தன் மகளுக்காகத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு கிளம்பிய அவர் ஒரு  இரும்புக்கை மாயாவி ரசிகர் என்பதைப் பிறகு ஸ்டாலின் சொல்லித் தெரிந்துகொண்டேன். 
  திரு இராஜ கணபதி--- சென்னை சில்க்ஸ் இயக்குனர் திரு K.விநாயகம் ---மற்றும் ம.ஸ்டாலின்

 மக்கள் சிந்தனை அரங்கம்

* நமது ஸ்டால் நிறையவே புத்தகங்களுடன் நிறைவாகக் காட்சியளித்தது. 'The CCC'யின் 'விரைவில் வருகிறது' ஆளுயரப் பேனர் stallன் பிரதானச் சுவரை அலங்கரித்தது. இந்தமாதம் வரயிருக்கும் 'எத்தனுக்கு எத்தன்', 'உறைபனி மர்மம்' ஆகியவற்றின் போஸ்டர்கள் பக்கவாட்டு சுவர்களில் பயமுறுத்தின!

*  மாயாவி & ஸ்பைடரின் புக்மார்க்ஸ், 'புரட்சித்தீ'யின் ஒருபக்கத்தை ட்ரெய்லராகக் கொண்ட நோட்டீஸ், நமது genreகளை அறிமுகப்படுத்தும் நான்கு பக்க pamphlet , விசிட்டிங் கார்ட்ஸ் என்று விதவிதமாய் மெனக்கெட்டிருப்பது திருப்தியளிக்கிறது.

* இந்தமாதத்தில் வெளிவரவேண்டிய புத்தகங்களில் ஒன்றுமட்டும் (ஊதாப் பொடியர்கள்? ) இன்னும் பிரின்ட் செய்யாமல் இருக்கிறார்களாம்.  கூட்டிக்கழித்துப் பார்த்தால் 'The CCC' வெள்ளிக்கிழமை கூரியரில் அனுப்பப்பட்டு, சனிக்கிழமையன்று ஈரோட்டில் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக அனுமானிக்க முடிகிறது!
 
 நாளை ஞாயிற்று கிழமை என்பதனால் நண்பர்களை அதிகம் எதிர் பார்ககிறோம்

நட்புடன்
ஈரோடு விஜய்
 
 
 நண்பர்கள் அனைவரையும் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வருக வருக என வரவேற்கிறோம்


நட்புடன்
ம.ஸ்டாலின்
 

18 கருத்துகள்:

  1. அருமை நண்பர் விஜய் அவர்களே.... சென்ற வருடம் போல ஒரு 'மெகா' வெளியீடு இல்லாது ஒரு வகையில் நமக்கு நஷ்டமே ....

    ஸ்டாலின் ஜி யை மீண்டும் அதே புத்துணர்ச்சி உடன் பார்பதில் மகிழ்ச்சி....

    முடிந்தால் தினந்தோறும் இங்கே அப்லோடவும்....

    நெக்ஸ்ட் வீக் மீட் பன்னுவோம் ....

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பர் விஜய் அவர்களே....

    அடுத்த வாரம் வருகிறேன்...

    பதிலளிநீக்கு

  3. ஈ வி., & மக்கள் ஜி.,
    அடுத்த சனி ஞாயிறுகளில் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகிறோம்.!
    முன்னதாக புதன்கிழமையன்று., என் தந்தை மற்றும் என் மகனுடன் திருவிழாவிற்கு வர இருக்கிறேன்.
    வாய்ப்பிருந்தால் நீங்கள் மற்றும் சாத்தான் ஜி யை சந்திக்க விழைகிறேன்.!

    பதிலளிநீக்கு
  4. ///"அட, ஓவியங்களே சரியில்லைன்றேன்... அப்புறம் கதையை எப்படி படிக்கிறதாம்? ///

    ஙே !! ????

    ///புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதென்பது அப்படியொன்றும் சுளுவான வேலையில்லை நண்பர்களே! :D ///

    :-) :-) :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட் ஆர்ட்டின் சார்.!முதன்முதலில் டெக்ஸை கலரில் பார்த்து இருப்பாரோ.?கா.க.கா.கூட கருப்பு&லெல்ளையில் கலரை விட தெளிவாக இருக்கும்.!

      நீக்கு
    2. அங்கே
      நி.ஒ.நரபலி
      கா.க.காலத்தை எடுத்துக்காட்டி இருக்காலாம்லனா

      நீக்கு
  5. நன்றி ஈரோடு விஜய், நானே நேரில் கலந்து கொண்டதுபோல் உணர்ந்தேன்

    பதிலளிநீக்கு
  6. நன்றி விஜய்.!தொடர்ந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.!.

    பதிலளிநீக்கு
  7. தூய தமிழ்,அட்டகாசமான தமிழ் மற்றும் அழகான ஆங்கில எழத்துக்கள்.அருமையான கலர் பிண்ணனி என்று இந்த தளம் அருமையாக உள்ளது.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டாலின் ஜி ப்ளாக்குக்கு வருக வருக என வரவேற்கிறேன் MV சார் ....தனி வீடு கட்டும் முன் இங்கே தான் நான் எழுதி வந்தேன் ....என்னுடைய முந்தைய சேலம் விழா கவர் ஸ்டோரிகளை நீங்கள் பார்த்து மகிழலாம் இங்கே ....

      நீக்கு
  8. நண்பர்களே ....அற்புதமான தினம் இன்று ...10.30க்கு நானும் யுவாவும் கிளம்பி 12.30க்கு ஈரோடு ஸ்டாலை அடைந்தோம்......ஏற்கனவே விஜய் , சாத்தான் ஜி, செல்வராஜ் &மகாதேவன் ,பழனிவேல் ஆகியோர் இருந்தனர் ...கூட்டமும் போக போக பிக்கப் ....நல்ல சேல்ஸ் ,, குண்டு புக்குகள் நல்ல சேல்ஸ் ....கார்த்திகை பாண்டியன் ஒரு புத்தக வெளியீட்டு க்காக வந்தவர் அவரும் நம்மோடு இணைந்து கொண்டார் ...சற்று நேரத்தில் பர்த்டே பாய் சிபிஜி வந்து சேர்ந்தார் ...வாழ்த்துக்கள் நாம் வணக்கத்துடன் வழங்க ....பாதாம் அல்வா தந்து பர்த்டே வை நம்மோடு கொண்டாடி மகிழ்ந்தார்.இப்போது மருத்துவர் சுவாமிநாதன் மற்றும் சில நண்பர்கள் வந்தனர் . .....மதிய பிறந்த நாள் ட்ரீட் ஜூனியர் குப்பன்னா ஓட்டலில் சிபிஜி வழங்கி மகிழ்ந்தார். 4.30க்க ஸ்டாலின் ஜி வந்த உடன் வெளியே மைதானத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை மேலும் சிறப்பான வகையில் கொண்டாடினோம் ...ப்ளாக்கில் வரும் சிம்பா ,திருப்பூர் இணைந்து கொண்டார் ....மாலை 7மணி வரை தொடர்ந்த கோலகல தினம் நிறைவாக அமைந்தது .....7மணிக்கு கிளம்பிய நானும் யுவாவும் 9 .15க்கு சேலம் வந்து சேர்ந்தோம் .....ஆசிரியர் வரும் அடுத்த வாரத்திற்கு இப்போது மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது ......

    பதிலளிநீக்கு

  9. // இப்படியொரு சூழலில், சென்ற வருடத்தைப்போல( LMS வெயீடு) கொண்டாட்டமானதொரு நிகழ்வு இம்முறை இல்லாமல்போனதும்கூட ஒருவகையில் நன்மைக்கே என்று நினைக்கத் தோன்றுகிறது! ஏனெனில், உற்சாகக் கூக்குரல்களும், கரவொலிகளும்கூட இப்போதைய இறுக்கமான சூழ்நிலைக்கு சற்றே அந்நியமாகிவிடும் வாய்ப்பிருப்பதே காரணம்! //

    அற்புதமான கருத்து விஜய் அண்ணா

    போன வருடத்தை நினைவுபடுத்தி நினைவுபடுத்தி என் மனம் தித்திப்பாய் இருக்கிறது

    தினமும் அப்லோடிடூங்கண்ணா

    ஸ்டாலின் சாரின் வருகை சந்தோஷமான 1ரு
    தன் உடல் பொருட்படுத்தாது காமிக்ஸ் ஆர்வம் கொண்டு வந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல

    பதிலளிநீக்கு
  10. // ஈரோடு நகரமே தங்கள் உறவினரை இழந்ததைப் போல் சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. //
    இந்த நாடே என்று சொல்லலாம்!

    I am missing the erode festival this time.

    பதிலளிநீக்கு
  11. தினம் "இன்றைய புத்தக காட்சியில் " என்ற வாறு தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் ....தி லயன் 250 ..சித்திரங்கள் சரி இல்லையா ...

    ..சந்தோசம் ..:​( (

    பதிலளிநீக்கு
  12. புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. @ இத்தாலி விஜய்

    விஜய் டிவியில் 'கோபிநாத்' பேசுவது போலவே...யாதர்த்தமான...சொல்லவந்ததை தெளிவாகவும்...எந்த எக்ஸ்ரா பிட்டிங்கும் இல்லாமல் உள்ளதை...வழுக்கிக்கொண்டே சொன்ன விதம் அட்டகாசம்..! அடுத்து வரும் நாட்கள் குதூகலத்தை அள்ளித்தரும் என்ற எதிர்பார்ப்பை படிப்பவருக்கு ஏற்படுத்தும் தொகுப்பு..! தொடருங்கள்...தொடர்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  14. விஜய் அண்ணாச்சி

    சூப்பர் அப்படியே தொடருங்க :))
    .

    பதிலளிநீக்கு